games

img

சென்னை ஓபன்: வெளியேறினார் பவுச்சர்ட்

சென்னை, செப்.1-6 சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் கனடா வீராங்கனையை வீழ்த்திய அர்ஜென்டினா வீராங்கனை  நாடியா பொடோரோஸ்கா அரையிறுதிக்குள் நுழைந்தார்.  வெள்ளியன்று (செப்.16) நடை பெற்ற முதல் காலியிறுதியில்  கனடா வீராங்கனை பவுச்சர்ட்,  நாடியா பொடோரோஸ்காவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து பவுச்சர்ட் முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார். இதனால் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.  இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற நாடியா தனது வேகத்தை முழுமையாக பயன்படுத்தினார். இதனால் அவருக்கு கை மேல் பலனும் கிடைத்தது. தொடர்ந்து நான்கு புள்ளிகளை குவித்தார்.  அதன் பிறகு, சுகாரித்துக் கொண்டு ஆடிய பவுச்சர் அடுத்தடுத்து மூன்று புள்ளி களை எடுத்தார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. இருவரின் ஆட்டத்திலும் அனல் பறந்ததால் 'டை பிரேக்கர்' வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனாலும் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் நாடியா கடும் சவால் கொடுத்தார். ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த செட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நாடியா 6-4  என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.  ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் தொடங்கியது. மிரட்டியது மழை! மேகமூட்டத்துடன் தொடர்ந்து மின்னலும் இடியும் ஒருபுறம் மிரட்டிக்கொண்டே இருந்தது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் மழை தூறல் போட்டதால் ஆட்டம் அரை மணி நேரம் தடைபட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியதில் இருந்து புயல் வேகம் எடுத்த நாடிய 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் 20 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு கொண்டு வந்து அரை இறுதிக்குள் நுழைந்தார்.

;