இந்திய அணியின் மூத்த டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா நடப்பு சீசன் விம்பிள் டன் தொடரில் பங்கேற்கப்போவ தில்லை என அறிவித்துள்ளார். ராம்குமார், யுகி ஆகியோர் தகுதிச்சுற்றில் வெளியேறியுள்ள நிலையில், விம்பிள்டன் தொட ரில் கலந்து கொள்ளும் ஒரே இந்தியர் சானியா மிர்சா தான். மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் சானியா மிர்சா இந்த வருடத்துடன் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.