games

img

பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் இன்று துவங்குகிறது

செஸ் உலகின் முதன்மையான தொடரான செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44-வது சீசன் தமிழ்நாட்டின் கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் வியாழனன்று தொடங்குகிறது.  இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், வியாழனன்று மாலை 5 மணிக்கு மேல் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட தொடக்க விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார். 

இன்று போட்டிகள் இல்லை 

தொடக்க தினத்தன்று போட்டிகள் கிடையாது. காலையில் கேப்டன் மீட்டிங் உள்ளிட்ட இதர  நிகழ்வுகளுடன் மாலையில் தொடக்க விழா நடைபெறும்.

காலை நேரத்தில் போட்டி கிடையாது

அனைத்து போட்டிகளும் மதியம் 3 மணிக்கு மேல் தான் தொடங்கும். காலை நேரங்களில் போட்டிகள் கிடையாது. கேப்டன் மீட்டிங் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளை காலை நேரத்துக்குள் முடித்து இருக்க வேண்டும். அதாவது சரியாக மதியம் 3 மணிக்கு வீரர் - வீராங்கனைகள் செஸ் கோர்ட்டில் இருக்க வேண்டும். 

விதிகள் கடுமை

செஸ் ஒலிம்பியாட் விதிமுறைகள் மிகவும் கடினமாக அமைக்கப்பட்டுள்ளன.  புள்ளிகள், போர்டுகளில் அமரு வர்கள் முன்கூட்டியே தெரிவிப்பது என அனைத்திலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் நிர்வாகக்குழு கடினமான முறையில் எச்சரிக்கையுடன் விதிமுறைகள் தொடர்பான தொகுப்பை வெளி யிட்டுள்ளது.

இந்திய அணிகள்

மொத்தம் 6 அணிகள் கலந்துகொள்கின்றன

 

ஆடவர் பிரிவு 
இந்தியா - 1 : கேப்டன் - நாராயணன்
இந்தியா - 2 : கேப்டன் - ரமேஷ் 
இந்தியா - 3 : கேப்டன் - தேஜாஸ்

மகளிர் பிரிவு
இந்தியா - 1 : கேப்டன் - அப்ஜித் 
இந்தியா - 2 : கேப்டன் -  ஸ்வப்னில்  
இந்தியா - 3 : கேப்டன் -  பவ்ரா

(பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ள வீரராக கருதப்படும்  தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இந்தியா -2 அணியில் உள்ளார்)

 

தமிழ்நாட்டிற்கு மட்டும் தனிஆலோசகர்

தமிழ்நாடு வீரர் - வீராங்கனை களுக்கு மட்டும் தனி  ஆலோசகரை நியமித்துள் ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அணி வீரர்களின்  ஆலோசகராக விஸ்வ நாதன் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.