games

img

வங்கதேசத்தில் வன்முறை: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுமா?

வங்கதேசத்தில் வன்முறை வெடித்து ராணுவ ஆட்சி அமைந்துள்ளதால் அங்கு டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 3 - 20 வரை வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வங்கதேசத்தில் வன்முறை வெடித்து ராணுவ ஆட்சி அமைந்துள்ளதால், அங்கு டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வங்கதேசத்தில் பாதுகாப்பு நிலையை கவனித்து வருவதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளாலும், வன்முறை நீடிப்பதால் போட்டி நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

வன்முறை நீடிக்கும் பட்சத்தில், டி20 உலகக் கோப்பைத் தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம். வன்முறை குறைந்து இயல்பு நிலை திரும்பினால், அங்கு டி20 உலகக் கோப்பை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.