லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன்
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் வெள்ளிக்கிழமை அன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலை யில், முதலில் களமிறங்கிய இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 14.2 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து இருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 3ஆவது பேட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். அறிமுக வீரரான சாய் சுதர்சனுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா டெஸ்ட் தொப்பியை வழங்கினார். இதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் சாய் சுதர்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கிளப் உலகக்கோப்பை கால்பந்து மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் மியாமி அணிக்கு முதல் வெற்றி
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி (அர்ஜெண்டினா கேப்டன்) அமெரிக்க கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வரு கிறார். இந்நிலையில், இந்த கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் “ஏ” பிரிவில் இடம்பெற்றுள்ள இன்டர் மியாமி அணி, போர்ச்சுக்கல் கிளப் அணியான போர்டோவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அபார வெற்றி பெற்று, கிளப் உல கக்கோப்பை கால்பந்து தொடரில் முதல் வெற்றியை ருசித்தது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி 54ஆவது நிமிடத்தில் கோலடித்து, மியாமி அணியின் வெற்றிக்கு உதவினார். முன்னதாக ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற தனது முதல் லீக் ஆட்டத்தில் அல் அஹ்லி (சவூதி கிளப்) அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா?
17 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக 18ஆவது ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி). இதன் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சூதாட்டம் மூலமாகவே ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளது என சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் கப்பன் பார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், “ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆர்சிபி அணிக்கான வெற்றிக் கொண் டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி காவல்துறை யிடமும் அனுமதி கேட்டுள்ளனர். இதன்மூலம் ஆர்சிபி அணி சாம்பியன் கோப்பையை வெல்ல சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் புகார் அளிப்பேன். 11 பேர் பலியான விவகாரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிக்கெட்டுக்கும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக் குமாருக்கும் என்ன தொடர்பு உள்ளது. அவர் ஆர்சிபி அணியை ரூ.8,600 கோடி க்கு முதலில் வாங்க நினைத்தார். பின் னர் ரூ.17,000 கோடி கொடுத்தாவது அவர் ஆர்சிபி அணியை வாங்க நினைத்ததாக சொல்கிறார்கள். இந்த நாட்டில் சட்டம் உள்ளது. அது என்ன வென்று காட்டுகிறேன். நான் மெது வாக தான் செயல்படுவேன். ஆனால் 11 பேர் பலி விவகாரத்தில் சட்டம் என்ன செய்யும் என காட்டுவேன்” என அவர் கூறினார்.