games

img

ஐபிஎல் இளம் வீரர்களின் வாழ்க்கையில் விளையாடும் நடுவர்கள்

15-வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த சீசன்களை போல் அல்லாமல் பல்வேறு சர்ச்சைக்கு இடையில் பரபரப்பாக  நகர்ந்து வருகிறது. அவ்வாறு நிகழும் சர்ச்சைகளில் முதன்மையானது நடுவர்களின் செயல்பாடு தான். நடப்பு சீசனில் நடுவர்கள் மிகவும் மந்தமாக செயல்பட்டு, வேண்டு மென்றே தவறான முடிவுகளை அளித்து வெற்றி பெறும் அணியின் குறுக்கே அணை கட்டி வெற்றியை தடுத்து வருகின்றனர். எல்பிடபிள்யு விவகாரத்தில் மிகவும் மோசமாக செயல்பட்டு டிஆர்எஸ் விதிமுறை களில் (அம்பயர்ஸ் கால்) பல்வேறு சர்ச்சை எழுகின்றது. நடுவர்கள் பெரும்பாலும் வீரர்களின் கோரிக்கைகளை மதிப்பது இல்லை. இதில் முக்கியமானது நோ பால் (வயிற்று பகுதி புல்டாஸ்) தான். இதனை கணிக்க வேண்டிய கள நடுவர்கள் கோட்டை விடுகிறார் என்றால் 3-வது நடுவருக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் பந்துவீச்சு பகுதியில் இருக்கும் நடுவர் 3-வது நடுவர் ஆய்வுக்கு உத்தரவிடமாட்டார். காரணம் கேட்டால் தேவையின்றி சிரிப்பார், சமாதானப் படுத்துவார் ஆனால் மூன்றாவது நடுவர் கோரிக்கைக்கு செவி சாய்க்கமாட்டார். கோரிக்கை வைக்கும் கேப்டன்கள் எவ்வளவோ போராடினாலும் கண்டுகொள்வதில்லை.

இந்த விவகாரத்தால் தில்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் தங்களது அணி பேட்டர்களை பெவி லியனுக்கு அழைத்தார். ஆனால் தவறி ழைத்தது நடுவர்கள் தான். ஆனால் அபராதம் விதிக்கப்பட்டது பண்ட்டிற்கு. வீரர்களுக்கு ஒரு நியாயம்? நடுவர்களுக்கு ஒரு நியாயமா?  கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை வீரர்களின் திறமையால் போட்டியின் தன்மை மாறுவது தான் செயல்முறை. ஆனால் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டி கள் நடுவர்களின் தவறுகளால் மாறியுள்ளது.  ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்களின் 70% பேர் இளம்வீரர்கள். இந்தியா வில் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் இளம் வீரர்களாக தான் இருக்கிறார்கள். அவர்களை சென்னை, பஞ்சாப், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய ஐபிஎல் நிர்வாகங்கள் தான் நன்றாக கவனித்து தனியாக பயிற்சி அளித்து நம்பிக்கையூட்டி அடுத்த தலைமுறைக்கு தயாராக்கி வருகிறது. மற்ற அணிகள் கோப்பை, வெற்றி என்று கண்டுகொள்வதில்லை. இந்த சிக்கலில் இருக்கும் இளம் வீரர்களை நடுவர்கள் தனியாக சோதித்து வருகின்றனர்.  மிகவும் அசால்ட்டாக செயல்பட்டு வரும் நடுவர்களின் போக்கை கண்டித்து போதுமான நடவடிக்கை எடுத்தால் தான் ஐபிஎல் தொடரோடு இந்த பிரச்சனை நிறைவு பெறும். இல்லையென்றால் கால்பந்து விளையாட்டுப் போன்று நடுவர்களுக்கும் வீரர்களுக்கும் மோதல் அதிகம் ஏற்படும். வங்கதேச கேப்டன் சாஹிப் அல் ஹாசன் போன்று கைகலப்பு கூட ஏற்படலாம்.

ஐபிஎல் தொடரில் நடுவர்களின் சம்பளம்

ஐபிஎல் தொடரில் ஐசிசி எலைட் பேனலின் நடுவர்கள் ஒரு போட்டிக்கு ரூ.1.98 லட்சம்  பெறுகிறார். அனுபவம் குறைந்த வளர்ச்சி கிரேட் பட்டியலில் உள்ளவர்கள்  ஒரு போட்டிக்கு ரூ.59 ஆயிரம் பெறுகிறார்கள். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது. நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் நடுவர் சம்பளத்திற்கு மட்டும் பிசிசிஐ சராசரியாக  ரூ.5 கோடியை செலவழித்து வருகிறது (கள நடுவர், போட்டி நடுவர் என அனைவர் சம்பளத்தை சேர்த்து).  இவ்வளவு சம்பள பின்புலத்தை பெற்று ஐபிஎல் தொடரில் அதிகம் விளையாடி வரும் இளம் வீரர்களின் வாழ்க்கையில் தனியாக விளையாடுவது தான் சோகம் கலந்து கோபமான விஷயம் ஆகும்.

இன்றைய ஆட்டங்கள் 
குஜராத் - லக்னோ 
இடம் : மராட்டிய சங்க மைதானம், புனே
நேரம் : இரவு 7:30 மணி