விம்பிள்டன் தொடரை விட்டு வெளியேறிய நிக் கிர்ஜியோஸ்
டென்னிஸ் உலகின் அதிரடி வீரரும், ஆஸ்திரேலிய நாட்டின் நட்சத்திர வீரருமான நிக் கிர்ஜியோஸ் கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விம்பிள்டன் தொடரை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அதாவது முதல் சுற்றில் பெல்ஜியம் வீரர் கோபினுடன் மோதவிருந்த நிலையில், காயம் காரணமாக நிக் கிர்ஜியோஸ்வெளியேறினார். தந்திரமான அதிரடிக்கு பெயர் பெற்ற கிர்ஜியோஸ் கடந்த விம்பிள்டன் (2022) தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறி 2-வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டன்... இன்று...
இன்று 2ஆம் கட்ட முதல் சுற்று ஆட்டங்கள்
நேரம் : மதியம் 3:30 மணிக்கு தொடங்குகிறது
ஆஷஸ் டெஸ்ட் : கடைசி 3 போட்டிக்கான ஆஸி., அணி அறிவிப்பு
பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரின் 73-வது சீசன் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டி யில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 6 அன்று லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில், கடைசி 3 போட்டி களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நாதன் லயன் நீக்கப்பட்டுள்ள நிலை யில், மைக்கேல் நசீர் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி விவரம் : பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சாக்னே, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜிம்மி பெய்ர்சன் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலந்து, மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டாட் மர்பி, மைக்கேல் நசீர்
டிஎன்பிஎல் 2023
மிரட்டும் மழை :
டிஎன்பிஎல் தொடருக்கு சிக்கல்
இன்றைய ஆட்டங்கள்
மதுரை - திருப்பூர்
இடம் : இந்தியன் சிமெண்ட் மைதானம், திருநெல்வேலி
நேரம் : இரவு 7:15 மணி
நாளையுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன.
அடுத்து ஜூலை 7 அன்று சேலத்தில் பிளே ஆப் சுற்றுகள் தொடங்குகின்றன
கேரளாவில் தென் மேற்கு பருவமழை வேக மெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில் தற்போதே பருவமழைக்கு நிகராக மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி சாரலில் உள்ள மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டிஎன்பிஎல் தொடர் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் டிஎன்பிஎல் தொட ரின் குவாலிபையர் 2 மற்றும் இறுதி ஆட்டம் திருநெல்வேலி யில் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி சாரலில் உள்ள முக்கிய மாவட்டம். கேரளாவில் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் திருநெல்வேலியில் மிக அதிகமாக இருக்கும் என்பதால் டிஎன்பிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் மழை விளையாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.