games

img

டி20 அணிகளை ஏலத்தில் எடுத்துள்ள ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள்!  

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கவிருக்கும் டி20 கிரிக்கெட் தொடரின், 6 அணிகளையும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் புதிய டி20 தொடரில் 6 ஐபிஎல் உரிமையாளர்கள் அணிகளை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. இதனால் அது ஒரு மினி ஐபிஎல் தொடராகவே இருக்கும் என ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய டி20 லீக் தொடர் பிப்ரவரி-மார்ச் 2023ல் நடைபெற உள்ளது. அதில் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ், என்.ஸ்ரீநிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்சின் பார்த் ஜிண்டால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தமிழ்நாட்டு உரிமையாளர்களான மாறன் சகோதரர்கள், லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் சஞ்சிவ் கோயெங்கா, ராஜஸ்தான் ராயல்ஸின் மனோஜ் பதாலே ஆகியோர் 6 அணிகளை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்காக மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் ரூ.250 கோடி வரை செலவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த மாத இறுதியில் அனைத்து விவரங்களையும் வெளியிடுவதாக கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கூறியுள்ளது.  

அணிகள் விவரம்  

கேப் டவுன்-மும்பை, ஜொகன்னஸ்பர்க்-சென்னை, டர்பன்-லக்னோ, போர்ட் எலிசபெத்-ஐதராபாத், ப்ரெடோரியா-டெல்லி, பார்ல்-ராஜஸ்தான்