வியாழனன்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலை யில், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடைசி ஓவரை வீச உனத்கட்டி டம் பந்தை கொடுத்தார். முதல் பந்தில் விக்கெட் விழுந்தாலும், கடைசி 4 பந்துகளில் அனுபவ வீரர் தோனி 16 ரன்கள் குவித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியை தமிழ்நாடு ரசிகர்கள் மிக ஆர்வமாக கொண்டாடி வரும் நிலையில், எந்த வகை தோல்வியாக இருந்தாலும் எப்போ தும் தங்கள் அணியை ஆதரிக்கும் மும்பை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவை வறுத்தெடுத்துவிட்டனர்.
காரணம் அதிரடி பினிஷர் தோனி களத்தில் நங்கூரமாக இருப்பதை உணரா மல் சிக்கனமான, அதிக சர்வதேச அனுபவம் உடைய பந்துவீச்சாளர் பும்ராவை முன்கூட்டியே 4 ஓவர்களை யும் வீச விட்டு கடைசி ஓவரை போதிய சர்வதேச அனுபவம் இல்லாத உனத்கட்டி டம் கொடுத்தது தான் பெரிய சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. எந்த வகை ஓவர்களையும் ஒரே மாதிரியாக வீசக்கூடிய உனத்கட்டை தவிர்த்து பும்ரா வை கடைசி ஓவரை வீச வைத்திருந்தால் மும்பை அணி கண்டிப்பாக வென்றி ருக்கும் என்பதே ரசிகர்களின் சமூக வலைதள குரலாக ஒலித்து வருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை அணி நடப்பு சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறும் பாதையில் பயணித்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இன்றைய ஆட்டங்கள்
ஐபிஎல்
கொல்கத்தா - குஜராத்
நேரம் : மாலை 3:30 மணி
இடம்: பாட்டில் மைதானம், மும்பை
பெங்களூரு - ஹைதராபாத்
நேரம் : இரவு 7:30
இடம் : பிராபோர்ன் மைதானம், மும்பை
சந்தோஷ் கோப்பை கால்பந்து
கர்நாடகா - மணிப்பூர்
நேரம் : மாலை 4:00 மணி
ஒடிஷா - குஜராத்
நேரம் : இரவு 8 மணி
2 ஆட்டங்களும் கேரளா மாநிலம் மலபுரத்தில் நடைபெறுகிறது