இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையு டன், தாயார் உடல்நிலை காரணமாக 3-ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அஸ்வின் வெளியேறியதால் இந்தியா 10 வீரர்களுடன் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி மீது தவறில்லை
அஸ்வின் விலகலால் பேட்டிங், பந்துவீச்சில் மட்டும் இந்திய அணி 10 வீரர்களை வைத்தே விளையாட முடியும். பீல்டிங்கில் அஸ்வினுக்கு பதில் மாற்று வீரரை களமிறக்கிக் கொள்ளலாம் என்ற விதியின் கீழ் இந்திய அணி விளை யாடி வருகிறது. அஸ்வினுக்கு பதில் மாற்று வீரரை களமிறக்க இங்கிலாந்து அணி தடை கற்களாக இருந்தது என்றும், இது விதிகளுக்கு புறம்பானது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி கோரவில்லை
அஸ்வினுக்கு பதில் மாற்று வீரர் விவகாரத்தில் இங்கிலாந்து அணியின் தயவை கண்டிப்பாக இந்திய அணி எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதாவது விதிகளின்படி மாற்று வீரரை இந்திய அணி களமிறக்க வேண்டும் என்றால், அதற்கு இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் சம்மதிக்க வேண்டும். அவர் சம்மதம் இல்லாமல் இந்திய அணி தன்னிச்சையாக மாற்று வீரரை கள மிறக்க முடியாது.
அஸ்வினுக்கு பதில் மாற்று வீரரை களமிறக்க இந்திய அணி முதலில் இங்கிலாந்து அணியிடம் கோரிக்கை விடுத்ததாக இதுவரை தகவல் வெளி யாகவில்லை. இந்திய அணி மாற்று வீரர் அனுமதி கோரி இருந்தும் சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருந்தால், இங்கிலாந்து அணியை குற்றம் சாட்ட லாம். ஆனால் அனுமதி கோராமல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸை குற்றம் சாட்டுவது தவ றானது ஆகும்.
அஸ்வின் தாயார் உடல்நிலை கார ணமாகவே டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்பதால், இதுபோன்ற விவகாரத்தில் எந்த அணியாக இருந்தா லும், மாற்று வீரருக்கான அனுமதியை அளித்திருக்கும். விளையாட்டு ஒன்றும் அரசியல் அல்ல என்பது குறிப்பிடத் தக்கது.