பொதுவாக ஐபிஎல் தொடரில் ஒரு சீசனுக்கு ஒரு சர்ச்சை என இருந்து வந்த காலம் மாறி ஒவ் வொரு 10 போட்டிகளிலும் ஒரு சர்ச்சை கள் மிகுந்த சீசனாக 15-வது சீசன் தொடர் நகர்ந்து வருகிறது. ஏற்கெனவே ராஜஸ்தான் வீரர் அஸ்வினின் ரிட்டயர்ட் ஹார்ட் முறை யில் வெளியேறியது உட்பட சில முக்கி யமான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலை யில், திங்களன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் தில்லி - ராஜஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் தில்லி அணிக்கு (6 பந்துகளில்) 36 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ராஜஸ்தான் வீரர் மெகோய் வீசிய முதல் 3 பந்துகளில் தில்லி வீரர் பவல் சிக்ஸர் விளாசி அசத்தினார். ஆனால் 3-வது பந்து புல்டாசாக வீசப்பட்டது. பேட்டரின் வயிற்றுக்கு மேலே புல்டாஸ் விதத்தில் பந்து வீசினால் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டு,
ஃபிரி ஹீட் அறிவிக்கப்படும். 3-வது பந்து ஏறக்குறைய புல்டாஸ் நோபால் போல இருக்க, பவல் நடுவரிடம் முறை யிட்டார். நடுவர் கண்டுகொள்ள வில்லை. அதை பற்றி காது கொடுத்து கேட்கவில்லை. ஒருகட்டத்தில் நடுவரின் செயல்பாட்டை பற்றி கடுப்படைந்த தில்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் 3-வது நடுவருக்கு பரிந்துரை செய்யுங்கள், இல்லையென்றால் வீரர்கள் பேட்டிங் செய்யமாட்டார்கள் என தனது வீரர்க ளை பெவிலியனுக்கு அழைத்தார். ஆனால் நடுவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என மன்றாடினர். தில்லி அணி கேப்டன் தனது அணியின் குழுவில் உள்ள ஒருவரை மைதா னத்துக்கு அனுப்பி வைத்தார். 3-வது நடுவருக்கு பரிந்துரை செய்யாமல் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாது எனக் கூறியும், நடுவர் அவரை சமாதா னம் மட்டுமே செய்தார். ஆனால் 3-வது நடுவருக்கு பரிந்துரை பற்றி பேச வில்லை. போட்டி நடுவர் தலையிட்ட தால் வேறு வழியின்றி தில்லி அணி தொடர்ந்து பேட்டிங் செய்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விகண்டது. போட்டி முடிந்த பின்பு தில்லி கேப்டன் ரிஷப் பண்டிற்கு 100% அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கெனவே இதே விவகாரத்தில் சென்னை அணி கேப்டன் தோனி மைதானத்திற்கு சென்று முறையிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
நடுவரின் தவறால் பண்டிற்கு தண்டனை
நோபால் விவகாரத்தில் தில்லி அணி கேப்டன் மீது எந்த குறை யும் சொல்ல முடியாது. பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் எவ்வித சந்தேகம் இருந்தாலும் களநடுவரிடம் முறையிடலாம். களநடுவருக்கு சந்தே கம் இருப்பின் 3-வது நடுரிடம் முறை யிடுவது விதி. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் நோபால் விவகாரத்தில் மட்டும் கள நடுவர் நிகில் மேனன் அமைதி காத்தது மிகப்பெரிய தவறு. அவர் என்ன காரணத்திற்காக இவ்வாறு செயல் பட்டார் என்பது தான் மிகப்பெரிய ஆச்ச ரியமாக உள்ளது. நடுவரிடம் மோதிய திற்காக மற்றும் பெவிலியனுக்கு கூப் பிட்டதற்காக, அணி குழுவில் ஒருவரை அனுப்பியதற்காக தில்லி கேப்டன் பண்டிற்கு 100% அபராதம் விதிக்கப் பட்டது.
கடும் கோபத்தில் தில்லி அணி
தில்லி அணியின் வளைக்குள் கொரோனா வேறு தனியாக விளையாடி 5-க்கும் மேற்பட்டோரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், அந்த அணி சற்று பார்ம் பிரச்சனை இழந்தது போல மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடுவரின் மோசமான செயல்பட்டால் நோபால் விவகாரம் தில்லி அணி வீரர்கள் மற்றும் நிர்வாக குழுவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விதிகள் சொல்வது என்ன?
வீரர்களுக்கு களநடுவர்களின் முடிவில் சந்தேகம் மற்றும் வீரர்கள் என்ன முறை யிடுகின்றனரோ அதை உடனடியாக வாய்ஸ் கான்பிரன்ஸ் மூலம் சொல்ல வேண்டும். அதை தெளிவுபடுத்த 3-வது நடுவர் உள்ளார். அதை பரிந்துரைப்பது மட்டுமே கள நடுவர்களின் வேலை. ஆனால் தனிப்பட்ட முறையில் கள நடுவர்களால் எதையும் முடிவு எடுக்க முடியாது. ஆனால் களநடுவர் நிகில் மேனன், நிகில் பட்வர்தன் தன்னிச்சையாக எடுத்த முடிவு விதிகளுக்கு உட்பட்டதாக தெரியவில்லை.
இன்றைய
ஆட்டங்கள்
லக்னோ - மும்பை (37ஆவது லீக்)
இடம் - வான்கடே மைதானம், மும்பை
நேரம் - இரவு 7.30 மணி