விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் 13-ஆவது சீசன் இந்தியாவில் வியாழனன்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் நவம்பர் 19 வரை, இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.
2-வது வெற்றியை ருசிக்குமா இந்தியா?
இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதல்
போட்டியை நடத்தும் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்திய நிலையில், 2-ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்தியா. தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியிடம் வீழ்ந்த ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் இந்தியாவை வீழ்த்தும் கனவில் களமிறங்குகிறது. அதே போல ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 2-ஆவது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான்
நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : தில்லி மைதானம்
மழை : லேசான வாய்ப்புள்ளது
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி : ஹாட் ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
“காவி” வண்ணத்திற்கு விளக்கம் கொடுக்கும் அளவிற்கு கீழே இறங்கியுள்ள பிசிசிஐ
கிரிக்கெட் உலகில் மிக முக்கிய மான மோதலில் ஒன்று இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ஆகும். இருநாட்டிற்கும் இடையே இருக்கும் எல்லை மோதல் பிரச்சனை கிரிக்கெட் விளையாட்டிலும் முளைத்து எலியும் - பூனையுமாக கிரிக்கெட்டிலும் மோது வது வழக்கம். இதனால் எந்தவித தொடராக இருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கு விளையாட்டு உலகில் தனி மவுசு உள்ளது. பாதுகாப்பு பிரச்ச னையை காரணம் காட்டி மோடி தலைமையிலான பாஜக அரசு இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர் களில் மட்டும் பங்கேற்று வருகிறது. இந்நிலையில், 13-ஆவது உலகக் கோப்பை தொடரின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணி கள் அக்., 14 அன்று மோதுகிறது. குஜ ராத் மாநிலம் அகமதாபாத்தில் நடை பெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி “காவி” நிறத்தில் ஜெர்சி (பனி யன்) அணிந்து விளையாடுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி யது. ஆனால் இந்த தகவலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ)தானாக முன்வந்து விளக்கம்அளித்துள்ளது. விளக்கம் அளிக்க காரணம் 2024 மக்களவைத் தேர்தல் அடுத் தாண்டு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு அரசியல் ஆதாயமாக தற்போது நடைபெற்றுக் கொண்டி ருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆளும் பாஜக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா மூலம் எதாவது செய்யலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகியது. தகவலின் அடிப்படையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டது. இந்த அறிவிப்பு பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் நடை பெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் மூலம் மக்களவை தேர்த லுக்காக இந்துத்துவா கும்பல் மூலம் மதவன்முறை அரங்கேறலாம் என சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறின.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யம் வன்முறை பதற்றம் காரணமாக குஜராத் மாநிலத்தில் விளையாட மறுத்தது. அதன்பிறகு சர்வதேச கிரிக் கெட் வாரியத்தின் அழுத்தத்தால் குஜ ராத்தில் விளையாட சம்மதித்தது. அடுத்ததாக இந்திய அணியின் பயிற்சி ஜெர்சி “காவி” வண்ணத்தில் அடிக்கப்பட்டு வீரர்களுக்கு வழங்கப் பட்டது. வீரர்கள் “காவி” வண்ண ஜெர்ஸியில் பயிற்சி பெற, பாஜகவின் அரசியல் ஆதாய திட்டம்தான் “காவி ஜெர்சி” என சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் கண்டன கருத்து தெரிவித்தனர். அரசியல் தெரியாத சிறு வர்கள் கூட மீம்ஸ் செய்தனர். “காவி பயிற்சி ஜெர்சி” கண்டன கருத்து தெரி வித்து முடிவதற்குள், பாகிஸ்தான் அணி க்கு எதிரான உலகக்கோப்பை ஆட்ட த்தில் இந்திய அணி “காவி ஜெர்சி” அணிந்து விளையாடப்போவதாக தக வல் வெளியாகியது. கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வழக்கம் போல கண்டன கருத்துக்கள், மீம்ஸ்கள் வெளியிட அலறிய பிசிசிஐ இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் “காவி” ஜெர்ஸி இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரி யமான பிசிசிஐ அமைப்பு கிரிக்கெட் தொடர்பான வேலைகளை மட்டுமே கவ னிக்க வேண்டும், அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஆனால் பாஜக வின் இழிஅரசியலால் உலகில் உள்ள வண்ணங்களில் ஒன்றான “காவிக்கு” விளக்கம் கொடுக்கும் அளவிற்கு பிசி சிஐ சென்றுள்ளது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.