சவூதி அரேபியா மன்னரை அவமதித்ததாக ரொனால்டோ மீது புகார்
சவூதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அல்-நாசர் அணியும், அல்-ஹிலால் அணியும் மோதின. அல்-நாசர் அணியில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோவும், அல்-நாசர் அணியில் பிரேசில் கேப்டன் நெய்மாரும் அங்கம் வகிக்கும் நிலை யில், தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் அல்-ஹிலால் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றது. தான் விளையாடியும் தன்னுடைய அணி கோப்பை வெல்லாமல் சொதப்பி யதால் ஏமாற்றமடைந்த ரொனால்டோ பரிசு வழங்கும் விழாவில் வெள்ளிப் பதக்கத்தை வாங்காமல் பெவிலி யனுக்குச் சென்று விட்டார். ரொனால்டோவிற்கு வெள்ளிப்பதக்கம் வழங்க மன்னர் காத்திருந்த நிலையில், அவர் வராததால் சவூதி அரேபிய அரசு ரொனால்டோ மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தங்கள் நாட்டிற்கு விளை யாட வந்து, தங்கள் நாட்டு அரசு வழங்கும் பதக்கத்தை வாங்காமல் மன்னரை அவமதித்ததாக ரொனால் டோ மீது சவூதி அரேபியா நாட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் டி-20 உலகக்கோப்பை நடத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கடும் எதிர்ப்பு?
வங்கதேசத்தில் டி-20 உலகக்கோப்பை நடத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கடும் எதிர்ப்பு? 9ஆவது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசத்தில் வரும் அக்டோபர் 3 அன்று தொடங்குகிறது. அக்டோபர் 20 வரை நடை பெறும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், வன்முறை காரண மாக டி-20 உலகக் கோப்பை தொடரை வங்கதேசத்தில் நடத்த வேண்டாம் என ஆஸ்திரேலிய மகளிர் அணி மறை முகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி கூறுகையில்,”வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் நேரத்தில் வங்கதேசத்தில் விளையாடுவதை நான் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. அது தவறான செயலாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். தற்போது வங்கதேசத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்துவதை விட பெரிய காரணிகள் விளை யாடுகின்றன. எனினும் உலகக்கோப்பை தொடர் வங்க தேசத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எங்களை பெரிதும் பாதிக்காது. நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம்” என அவர் கூறினார். வங்கதேசத்தில் இன்னும் வன்முறை குறையாத நிலையில், மகளிர் டி-20 உலகக்கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ மாணவி வன்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மோகன் பகான் கால்பந்து அணி போராட்டம்
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முது கலை பயிற்சி மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இந்த வன்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் முதன்மையான கிளப் கால்பந்து அணிகளில் ஒன்றான மோகன் பகான் அணியும் மருத்துவ மாணவி வன்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளது. ஞாயிறன்று கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் முன்கள வீரரும், மோகன் பகான் அணியின் கேப்டனுமான சுபாசிஷ் போஸ், அவரது மனைவி கஸ்தூரி சேத்ரி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவர் கல்யாண் சவுபே மற்றும் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மருத்துவ மாணவி வன்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.