பிரிஸ்பேன் டெஸ்ட் - ஆஸ்திரேலியா 445; இந்தியா மீண்டும் திணறல்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றா வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா வின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட் (152), ஸ்மித் (101) ஆகியோரின் அசத்தலான சதத்தின் உதவியால் முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னி ங்க்ஸை தொடங்கிய இந்திய அணி வழக்கம் போல ஆஸ்திரேலிய அணி யின் வேகத்தில் திணறியது. ஸ்டார்க் வேகத்தில் ஜெய்ஸ்வால் (4), கில் (1) ஆகியோர் தொடக்கத்திலேயே ஆட்ட மிழக்க, ஹாசில்வுட் வேகத்தில் கோலி யும் (3), கம்மின்ஸ் வேகத்தில் பண்டும் (9) அடுத்தடுத்து பெவிலியன் திரும்பி னர். எனினும் கே.எல்.ராகுல் மட்டும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை திடமாக கணித்து நிதான வேகத்தில் ரன் சேர்த்துக் கொண்டு இருந்தார். 3ஆவது சீசனில் மழை குறுக்கிட்ட தால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்து இருந்தது. கே.எல்.ராகுல் (33), ரோகித் சர்மா (0) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிக பட்சமாக ஸ்டார்க் 2 விக்கெட்டு களை வீழ்த்தினார். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 394 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு 4ஆவது நாள் ஆட்டம் தொடங்குகிறது.
செஸ் நட்சத்திரங்களும்... பழக்க வழக்கங்களும்... (2)
3.பிரக்ஞானந்தா (இந்தியா) ; போட்டி தொடங்கும் முன்பே விரைவாக செஸ் களத்திற்கு வந்துவிடுவார். போட்டி தொடங்கிய பின்பு தலையில் கை வைத்துக்கொண்டே சிந்தித்து காய்களை நகர்த்துவார். காய்களை நகர்த்து வதில் படுவேகமாக இருப்பார். தான் வெற்றி பெற்ற தருணத்தில் மட்டுமே அருகில் நடக்கும் போட்டிகளை பார்ப்பார். இல்லையென்றால் செஸ் கீ போர்டை தவிர வேறு எங்கும் திரும்ப மாட்டார். வெற்றிக்கு அருகிலும், ஆட்டநேரம் கூடுதலாக இருந்தால் தூங்கி விடுவார். 4.வைசாலி (இந்தியா) ; பிரக்ஞானந்தாவின் சகோதரி யான வைசாலிக்கு பெரியளவில் தனிப்பட்ட பழக்க வழக் கங்கள் கிடையாது. ஆனால் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு காய்களை நகர்த்துவார். பரபரப்பாக விளையாட மாட்டார். சாதுவாகவே செஸ் களத்தில் இருப்பார். 5.அர்ஜுன் எரிகைசி (இந்தியா) ; இடதுகை பழக்கம் கொண்ட அர்ஜுன் எரிகைசி வித்தியாசமான ஆட்ட முறையை கொண்டவர். செஸ் போர்டை அதிகம் பார்க்க மாட்டார். நகர்த்தலின் போது மட்டுமே செஸ் போர்டை பார்ப்பார். மிகவும் கூலாக விளையாடக் கூடியவர். செஸ் களத்தில் குழந்தையைப் போல இருப்பார். 6.ஹிகாரு நாகமுரா (அமெரிக்கா) ; பரபரப்பாக விளை யாடும் தன்மை கொண்டவர். அடிக்கடி தண்ணீர் குடித்துத் கொண்டே இருப்பார். 2 லிட்டர் தேவைப்படும். அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர். தோல்வியை ஏற்காமல் சட்டென்று செஸ் களத்தில் இருந்து சென்று விடுவார்.