games

img

ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு இந்தியா திணறல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதனன்று தொடங்கியது.  டாஸ் வென்ற பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சை களமிறக்கிய ஆஸ்திரேலிய அணி, 11 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்திருந்த பொழுது இந்திய அணியின் மிடில் ஆர்டரை (5 விக்.,) சுக்குநூறாக உடைத்தது. மிடில் ஆர்ட ருக்கே இந்த நிலைமை என்றால் பின்வரிசையின் நிலைமை யை மேற்கொண்டு கூறவா வேண்டும். இந்திய அணி முதல் இன்னிங்சில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக குன்னேமான் 5 விக்கெட்டுகளையும், லியோன் 3 விக்கெட்டு களையும் வீழ்த்தினர்.  தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஜடேஜா சுழலில்  12 ரன்னில் தொடக்க வீரர் ஹெட்டை (9) இழந்தாலும், காவாஜா (60) - லபுஸ்சாக்னே (31) ஜோடி தொடர்ந்து விக்கெட்டு கள் சரியாமல் நிதான வேகத்தில் ரன் குவித்தனர். இந்த  ஜோடியும் ஜடேஜா சுழலில் வீழ்ந்த நிலையில், கேப்டன் ஸ்மித் (26) ஓரளவு தாக்குப்பிடித்து பெவிலியன் திரும்பி னார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி  54 ஓவர்களில் 4 விக்., இழப்பிற்கு 156 ரன்கள்  எடுத்து இந்திய அணியை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது.