games

img

விளையாட்டு...

பிரிஸ்பேன் டெஸ்ட்  ஹெட், ஸ்மித் சதம் ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றா வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா வின் பிரிஸ்பேன் நகரில் இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை அன்று  தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலை யில், ஆஸ்திரேலிய அணி முதலில் கள மிறங்கியது. 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்து இருந்த பொழுது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இடைவிடாமல் கனமழை தொடர்ந்து நீடித்ததால் முதல் நாள் ஆட்டத்தை கைவிடுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.  தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதி காலை 5:30 மணிக்கு இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தி லேயே மிக்ஸ்வினி (9), காவஜா (21),  லபுஸ்சாக்னே (12) ஆகியோர் அடுத்த டுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் விரைவாக ஆட்டமிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 33ஆவது சதம் ஆனால் அனுபவ வீரர் ஸ்மித், அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் காபா  மைதானத்தில் நங்கூரம் அமைத்தனர். இருவரும் ஒருநாள் ஆட்ட பாணியில் இந்திய அணியின் பந்துவீச்சை புரட்டி யடுத்தனர். இந்த ஜோடியை கழற்ற முடி யாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் கடு மையாக திணறிய நிலையில், ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் சத மடித்து அசத்தினர். ஸ்மித்திற்கு இது 33ஆவது டெஸ்ட் சதம் ஆகும். அதே போல டிராவிஸ் ஹெட்டிற்கு இது 9ஆவது சதம் ஆகும். 190 பந்துகளில் 101 ரன்கள் எடுத்த ஸ்மித் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு மார்ஷ் (5) வந்த வேகத்தில் வெளியேற, மறுபக்கம் நிதா னமாக விளையாடிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட், மார்ஷ் ஆட்டமிழந்த வுடன் அதிரடியாக விளையாட ஆரம்பி த்தார். 160 பந்துகளில் 152 ரன்கள்  குவித்து இருந்த பொழுது பும்ரா பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட்டும் ஆட்டமி ழந்தார். கம்மின்ஸ் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி நிதானமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடி வில் ஆஸ்திரேலிய அணி 101 ஓவர் களில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி (45), ஸ்டார்க் (7) ஆகியோர் களத்தில் உள்ள னர். இந்திய அணி தரப்பில் பும்ரா 5  விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், நிதிஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டு களையும் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு 3ஆவது நாள் ஆட்டம் தொடங்குகிறது.

செஸ் நட்சத்திரங்களும்... பழக்க வழக்கங்களும்...

விளையாட்டு உலகில் ஒவ்வொரு வீரர் - வீராங்கனைகளுக்கும் விளையாட்டோடு சேர்ந்து ஒரு சில பழக்க வழக்கங்களுடன் இருப்பார்கள். அந்த பழக்க வழங்கங்கள் சுவாரஸ்யமிக்கவையாக இருக்கும். அதே போல தான் செஸ் விளையாட்டு பிரிவிலும் வீரர் - வீராங்கனைகளுக்கு குறிப்பிட்ட பழக்க வழக்கங்களும் சுவாரஸ்யமிக்கதாகவே உள்ளது. அவைகளை பற்றி பார்க்கலாம் :  1. கார்ல்சன் (நார்வே) : போட்டி தொடங்கும் முன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருப்பார். போட்டிக்கு சரியான நேரத்திற்கு வர மாட்டார். ஆட்டத்தை தொடங்கும் முன் அனைத்து காய்களையும் (செஸ்) ஒரு முறை தொட்டு சரியாக அடுக்கி வைப்பார். போட்டியின் பொழுது காய்களை கையில் வைத்து பாலிஸ் செய்து கொண்டே இருப்பார். அதிகமாக வேடிக்கை பார்ப்பார். ஒரு இடத்தில் அதிக நேரம் அமர மாட்டார். பக்கத்து பெஞ்சில் நடக்கும் ஆட்டங்களை காணச் சென்று விடுவார். பல்வேறு சேட்டைகளை செய்தாலும் கடைசியில் அசால்ட்டாக வெற்றியை ருசித்து விடுவார். 2. குகேஷ் (இந்தியா) : போட்டிக்கு சரியான நேரத்தில் வருவார். போட்டிக்கு இடையே தியானத்தை கடைபிடிப்பார். போட்டியின் பொழுது நடைபயணம் மேற்கொள்வார். செஸ் போர்டை தவிர வேறு எங்கும் திரும்ப மாட்டார். தன்னை எதிர்கொள்ளும் வீரரை கூட பார்க்கமாட்டார்.  அதிகம் பிரேக் எடுக்க மாட்டார்.  3. டிங் லிரென் (சீனா) : போட்டிக்கு சரியான நேரத்தில் வருவார். போட்டியின் பொழுது அதிக நேரம் பிரேக் எடுப்பார். பிரேக்கின் பொழுது நட்ஸ் வகைகளை அதிகமாக உண்பார். தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார். அதிகம் சிரிக்க மாட்டார். அதிகம் ரிஸ்க் எடுத்து விளையாடக் கூடியவர். ஒரு சிறிய தவறான நகர்த்தலுக்கு அழுது கூட விடுவார்.  (நாளை இரண்டாவது பாகம்...)