8-வது சீசன் புரோ கபடி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் ஆட்டங்கள் வரும் 19-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் பாக்கி உள்ள நிலையில், பாட்னா அணி முதல் அணியாக குவாலிஃபை சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள 5 குவாலிஃபை இடங்களுக்கு 8 அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன. எனினும் தில்லி, ஹரியானா, பெங்களூரு ஆகிய அணிகள் புள்ளிகளின் பலம் மற்றும் சூப்பர் பார்மில் இருப்ப தால் அந்த அணிகள் எளிதாக குவாலிஃபை சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் 14 லீக் ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டால் மீதமுள்ள 2 இடங்களுக்கு உத்தரப்பிர தேசம், மும்பை, குஜராத், புனே, ஜெய்ப்பூர் ஆகிய 5 அணிகளில் ஏதேனும் 2 அணிகள் முன்னேறி குவாலிஃபை சுற்றுக்கு தகுதி பெரும். தமிழ்நாடு அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. அதில் ஆச்சர்யப்படும் அளவிற்கு வெற்றி பெற்றால் மட்டுமே குவாலிஃபை சுற்று பற்றி யோசிக்க முடியும்.
இன்றைய ஆட்டங்கள்
மும்பை - ஜெய்ப்பூர் (இரவு 7:30) / பாட்னா - பெங்களூரு (இரவு 8:30)
புனே - தமிழ்நாடு (இரவு 9:30)
மூன்று ஆட்டங்களும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறுகிறது.