games

img

விளையாட்டு...

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்

சின்னர் சாதனை

அமெரிக்க நாட்டின் முதன்மையான சர்வதேச டென் னிஸ் தொடரான சின்சினாட்டி தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் செவ்வாயன்று அதிகாலை நடை பெற்றது. இந்த இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர், தரவரிசையில் இல்லாத அமெரிக்கா வின் தியாபோவை எதிர்கொண்டார். சூப்பர் பார்மில் உள்ள சின்னர் 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த பட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் (2024) 2 “ஏடிபி மாஸ்டர்ஸ் 1000” கோப்பை களை வென்ற முதல் வீரர் என்ற அசத்தல் சாதனையை படைத்துள்ளார் இத்தாலியின் சின்னர்.

சபலென்கா சாம்பியன்
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள பெலாரஸின் சபலென்கா, தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்துடன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 7-5  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒரே ஆண்டில் ரூ. 5,120 கோடி உதிரி வருமானம் 2023 ஐபிஎல்லில் ரூ.11,769 கோடி அள்ளிய பிசிசிஐ

கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொட ரான ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் (2023) உதிரி வருவாயாக ஒரே ஒரு தொடரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) கூடுதலாக  ரூ. 5,120 கோடி கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விளம்பரம், ஒளிபரப்பு உரிமம் (ஒப்பந்தம் அல்லாத), ஸ்பான்சர் ஆகிய வருவாய் இல்லாமல்  எந்தவிதத்தில் கூடுதலாக ரூ. 5,120 கோடி வருவாய் கிடைத்தது என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ விளக்கமும் அளிக்கவில்லை.

2023இல் மட்டுமின்றி 2022இல் ரூ.2,367 கோடி பிசிசிஐக்கு உபரி வருவாய் கிடைத்துள்ளது. அதாவது 2022யை விட 2023இல் 116% கூடுதலான அளவில் உபரி வருவாய் உயர்ந்துள்ளது. இந்த உதிரி வருவாய் மூலம் 2023 ஐபிஎல் தொடரால் பிசிசிஐக்கு கிடைத்த மொத்த வருவாய் ரூ.11,769 கோடி ஆகும். இது ஆண்டு வளர்ச்சி விகிதம் 78% ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஓவரில் 39 ரன்கள்
யுவராஜ்சிங் சாதனை முறியடிப்பு
சமோவா வீரர் கலக்கல்

2026ஆம் ஆண்டில் 10ஆவது டி-20 உலகக்கோப்பை தொடர் இந்தியா, வங்கதேச நாடுகளில் கூட்டாக நடைபெறு கிறது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டம் தற்போதே  துவங்கியுள்ள நிலையில், ஈஸ்ட் ஏசியா – பசிபிக் தகுதிச் சுற்றில் வனாட்டு அணி, சமோவா அணியை எதிர்கொண்டது. 

இந்த ஆட்டத்தில் சமோவா அணி வீரர் புதிய சாதனை படைத்துள்ளார். 20 ஓவர்களில் சமோவா அணி 174 ரன்கள் குவித்த நிலையில், அந்த அணியின் டேரியஸ் வீசர் அதிரடியாக விளையாடி 62 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். குறிப்பாக வனாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15ஆவது ஓவரில் டேரியஸ் வீசர் 6 சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்ட நிலையில், 15ஆவது ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை டேரியஸ் வீசரும், அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையை சமோவா அணியும் பெற்றுள்ளது. இதற்கு முன் ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடித்து 36 ரன்கள் (யுவராஜ்சிங் - இந்தியா, 2007) குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு யுவராஜ்சிங்கின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.