games

img

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3ஆவது தங்கப்பதக்கம்!

பாராலிம்பிக்கில் ஆடவருக்கான(எஃப்64) ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் சுமித் ஆண்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது.

இந்நிலையில், ஆடவருக்கான(எஃப்64) ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் சுமித் ஆண்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சுமார் 70.59 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், பாராலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதித்துள்ளார்.

இதுவரை இந்தியா வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 15ஆவது இடத்தில் உள்ளது.