நீரஜ் சோப்ரா மீண்டும் அசத்தல்
டைமண்ட் லீக் தொடரிலும் இந்தியாவிற்கு வெள்ளி
சுவிட்சர்லாந்து நாட்டின் லாசேன் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை போன்ற தொடக்கத்தில் திணறினார். எனினும் கடைசி வாய்ப்பில் 89.49 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து 2ஆவது இடத்துடன் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். கிரேனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப்ப தக்கம் வென்ற நிலையில், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (87.8மீட்டர்) வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த தொடரில் பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அஷ்ரத் நதீம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு இந்திய ஒலிம்பிக் மருத்துவ குழுவே காரணம்
விளையாட்டுத்துறை மருத்துவர் மனித் ஆரோரா குற்றச்சாட்டு
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு இந்திய ஒலிம்பிக் மருத்துவ குழுவே கார ணம் என நாட்டின் பிரபல விளை யாட்டுத்துறை அறுவை சிக்ச்சை மருத்துவர் மனித் ஆரோரா குற்றச் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”வினேஷ் போகத் விவகாரத்தில் என்ன தவறு இருக்கிறது என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். நான் உறுதியாக சொல்கிறேன் வினேஷ் போகத் விவகாரத்தில் அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை சரியாக மருத்துவக் குழு கையாளவில்லை. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சுமார் 200 முதல் 300 வீரர்- வீராங்கனைகள் வரை எடை சார்ந்த போட்டியில் விளையாடுகிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் எடையை சரியாக கண்காணித்த நிலையில், வினேஷ் போகத் மட்டும் தோற்றுவிட்டால் என்றால் அது அவருடைய தவறு கிடையாது. நிச்சயம் இந்திய ஒலிம்பிக் மருத்துவக் குழு சரியாக கண்காணிக்கவில்லை என்று தான் அர்த்தம். வினேஷ் போகத் எடையை அவர்களுடைய மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து அதற்கு தேவையான மாற்று உணவுகளை வழங்கி இருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்த மாதிரி எனக்கு தெரிய வில்லை. நான் ஒரு பேட்டியில் பார்த்த போது, மருத்துவ குழு உறுப்பினர் ஒருவர் நாங்கள் வினேஷ் போகத்தின் முடியை வெட்டி எடையை குறைக்க முயற்சி செய்தோம் என்றெல்லாம் கூறி னார்கள். இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முடியை வெட்டி தான் எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த தொடரில் விளையாடிய அனைத்து வீரர்-வீராங்கனைகளுமே மொட்டை தலையுடன் தான் இருப்பார்கள்” என அவர் கூறினார்.
“உசைன் போல்ட், பெல்ப்ஸை ஏன் தடைசெய்யவில்லை?”
இமானே கெலிப் பாலின விவகாரம் தொடர்பாக நடிகை டாப்ஸி கேள்வி
பாரீஸ் ஒலிம்பிக் குத்துச் சண்டை 66 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இமானே கலிப்பின் பாலினம் சமூகவலைதளங் களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்திய நடிகையான டாப்ஸி பானு, அவருக்கு ஆதரவாக அழுத்தமான கருத்துக் களை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து டாப்ஸி பானு கூறுகை யில், “ஹார்மோன் என்பது நம்முடைய கையில் இல்லை. நாம் ஹார்மோன் களை அதிகரிக்க எந்த ஊசியையும் செலுத்திக்கொள்வதில்லை. ஆகவே நம்முடைய கையில் இல்லாத ஒரு விஷ யத்திற்காக, நாம் எதற்காக தடை செய்யப் பட வேண்டும்? அப்படியானால் உசைன் போல்ட் (ஜமைக்கா - ஓட்டம்), மைக்கேல் பெல்ப்ஸ் (அமெரிக்கா - நீச்சல்) போன்ற பல வீரர்கள் நீளமான கை, கால்கள் போன்ற உயிரியல் விளிம்புடன் பிறக்கிறார்கள். அவர்கள் மற்றவீரர்களை விட வித்தியாசப்படு கிறார்கள்தானே. அவர்கள் ஏன் தடை செய்யப்படவில்லை? வாழ்க்கை முழு வதும் பெண்ணாகவே வளரும் ஒரு நபர், திடீரென ஏற்படும் டெஸ்டோஸ்டி ரோன் அளவு அதிகரிப்பால் தடை செய்யப்படுவது நியாயமானது இல்லை” என அவர் கூறினார்.