games

img

ஒலிம்பிக் திருவிழா - 2024

உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 
33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

மனு பாக்கர் மீண்டும் அசத்தல்
25 மீ பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர் - வீராங்கனைகள் அடுத்தடுத்து சொதப்பி, தொடரை விட்டு வெளியேறி வரும் நிலையில், துப்பாக்கிச் சுடுதல் பிரிவு வீராங்கனையான மனு பாக்கர் மட்டும் நாட்டின்  பெருமைக்காக தனி ஒருவராக போராடி வருகிறார்.

இந்த போராட்டத்தின் பலனாக 10 மீ ஏர்  பிஸ்டல் மற்றும் 10 மீ ஏர்  பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கர், வெள்ளியன்று 25 மீ பிஸ்டல் பிரிவிலும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி யுள்ளார். 25 மீ பிஸ்டல் பிரிவிற்கான இறுதிச் சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி சனியன்று மதியம் 1 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இந்த பிரிவி லும் பதக்கம் வெல்லும் பட்சத்தில் ஒரே ஒலிம்பிக் தொடரில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை மனு பாக்கர் படைப்பார். தற்பொழுதே ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை மனு பாக்கர் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வாள்வீச்சில் மிரட்டிய 7 மாத கர்ப்பிணி
பாரீஸ் ஒலிம்பிக்கில் கவனத்தை ஈர்த்த எகிப்து பெண்

எகிப்து நாட்டைச் சேர்ந்த நடா ஹபிஸ் (26) என்ற பெண் பென்சிங் (வாள்வீச்சு) பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை எலிசபத்தை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (நாக்-அவுட்) தகுதி பெற்றார். ஆனால் நாக் அவுட் சுற்றில் தென்கொரியா வீராங் கனை ஜியோனிடம் தோல்வியை தழுவி நடா ஹபிஸ் தொடரிலிருந்து வெளி யேறினார். 

பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து வெளி யேறிய பொழுது நடா ஹபிஸ் ஒரு  செய்தியை வெளியிட்டார்.  அந்த செய்தி உலகம் முழுவதும்  அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை  ஏற்படுத்தியுள்ளது. நடா ஹபிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், “மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடி யிருக்கிறேன். ஆனால் இது என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒலிம்பிக்ஸ்  ஆகும். இந்த ஒலிம்பிக்ஸ்  களத்தில் நானும், என்  எதிரணி வீராங்கனை மட்டும் விளையாடவில்லை. மூன்றாவ தாக ஒரு சிறிய ஒலிம்பிக் நட்சத்திரமும் என்னுடன் இருந்தார். ஆம், இந்த உல கத்தைக் காண காத்திருக்கும் என்  குழந்தையும் என்னுடன்  களத்தில் இருந்தார். நானும் என் குழந்தையும் சேர்ந்து களத்தில் வாள் வீசினோம்.  இதற்காக இருவரும் உடல்ரீதியாக வும், மன ரீதியாகவும்  நிறைய சவால் களை எதிர்கொண்டோம். கர்ப்ப காலம் என்பது கடினமானதுதான். ஆனால் குடும்பத்தையும், கனவை யும் ஒருசேர சுமப்பது அதைவிடவும் கடினமானது. சாதிப்பதற்கு இது போன்ற சவால்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும் என்றாலும், இது சுக மான வலிதான். இந்தச் சூழலிலும் நான் ஒலிம்பிக்கில் பங்கேற்க எனக்கு உறு துணையாக இருந்தார் என் கணவர். என் குடும்பமும் எனக்கு உறுதுணை யாக நின்றது. அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். நான் கர்ப்பிணியாக விளையாட எனது கணவர் முழு ஆதரவை வழங்கினார். அவர் வைத்த நம்பிக்கையால் தான் இந்த அளவிற்கு என்னால் வர முடிந்தது” என்று பதிவிட்டிருக்கிறார். 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், எகிப்து  நாட்டைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கடினமான, ஆபத்தான வாள்வீச்சு பிரிவில் கலந்து கொண்டு  நாக் - அவுட் சுற்று வரை முன்னேறி யுள்ள சம்பவம் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதக்க வாய்ப்பு பறிபோனது : பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் 7ஆவது நாளான வெள்ளியன்று நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு நாக் அவுட் (ரவுண்டு - 16) சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து - சீனாவின் ஹீ பிங்ஜியா ஆகியோர் மோதினர். தொடக்க சர்வீஸ் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை சீனாவின் ஹீ பிங்ஜியா முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி னார். இரண்டாவது செட்டை கைப்பற்றி பி.வி.சிந்து பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹீ பிங்ஜியா அதிரடி ஷாட்களை தேவைக்கேற்ப பயன்படுத்தி மற்ற நேரங்களில் டிராப் ஷாட் மூலம் பி.வி.சிந்துவை திணறடித்தார். இறுதியில் 2ஆவது செட்டையும் சீனாவின் ஹீ பிங்ஜியா கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேற, பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். 2016 ரியோ மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் சீசனில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து இம்முறையும் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாக் அவுட் சுற்றோடு பி.வி.சிந்து வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.