facebook-round

img

மற்ற சாமிகள் "மப்பில்" இருக்கையில் ஆயுதம் ஏந்துவாள் அவள்- ஆர். பாலகிருஷ்ணன்

பெண்

பேணுதல் என்ற
அன்புச் சொல்லின்
அடிச்சொல் பெண்.

பெண் 
பேணவில்லை
என்றால்
மனிதன் இன்னும் 
குகையில் தான்
இருப்பான்.

வீட்டைக் கட்டியவனை
வியந்தோம்.
வீட்டைச் சுமந்தவளை
வியந்தோமா?

சிந்துவெளித் 
தாய்த்தெய்வத்தின்
மார்பில் சுரந்தது
திராவிடச் சீம்பால்.

அதனால் தான்
இந்தியக் கிராமங்களை
இன்னும் 
தேவதைகளே 
ஆள்கிறார்கள்.

அய்யனார்
எல்லையில் நின்றாலும்
அடுப்பில் நெருப்பு
அம்மனின் பொறுப்பு..

மற்ற சாமிகள்
"மப்பில்" இருக்கையில்
ஆயுதம் ஏந்துவாள்
அவள்.

அவள் விளக்காகவும்
இருக்கிறாள்...
வெளிச்சமாகவும் 
இருக்கிறாள்...

தேவைப்படும் 
போதெல்லாம் 
தீப்பந்தமாகிறாள்...

ஆர். பாலகிருஷ்ணன்

;