உயர் நடுத்தர மக்கள் வசிக்கும்
நவீன குடியிருப்பு வளாகங்களில்
(Gated Community) வாக்குச்
சாவடிகளை அமைக்கலாமா என
தேர்தல் ஆணையம் ஆலோசித்து
வருவதாக செய்திகள் வருகின்றன.
அனைவரையும் வாக்களிக்க
வைக்கவே இம்முயற்சி என
சொல்கிறார்கள். ஆனால்
உண்மையில் மேல்தட்டு
வகுப்பினரின் வாக்குகளை
தங்களுக்கு சாதகமாக
ஒருங்கிணைப்பதற்கான
ஆளும் தரப்பினரும் முயற்சி
இதன் பின்னணியில் இருப்பதாக
சந்தேகமும் எழாமல் இல்லை..
வாழ்நிலை, புழங்கும் பொதுவெளி
என சமூக & பொருளாதார ரீதியான
சமநிலை சிதைக்கப்பட்டுள்ள சூழலில் எடுக்கப்படும் இத்தகைய முடிவுகள்
மேலும் பிளவுகளையே உருவாக்கும்.
அரசியல், பண்பாடு, பொருளாதாரம்
என அனைத்து தளங்களிலும்
ஆபத்தை விளைவிப்பவர்களை
வீழ்த்துவதற்கான தருணம் இது..!!!