facebook-round

img

எவரிதிங் இஸ் ஓகே இன் காஷ்மீர் - ஆர்.விஜய சங்கர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. சிறப்பு அந்தஸ்து நீக்கப் பட்டதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று பிஜேபியும், மோடி பக்தர்களும் கொண்டாடி வரும் வேளையில், கோட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறது பிஜேபி. வெளியான 307 முடிவுகளில் 271இல் அது தோற்றிருக்கிறது. இதில் என்ன விசேஷம் என்றால் இந்தத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்தச் சூழலில் வெற்றி பெற்ற பெரும்பாலானோர் சுயேச்சைகள். கூடுதல் விசேஷம் பிஜேபி வலுவாயிருக்கும் ஜம்மு பிரதேசத்திலும் சுயேச்சைகளைக் கூட வெல்ல முடியவில்லை. ஜம்முவில் போட்டியிட்ட 135 வேட்பாளர்களில் 52 பேர்தான் வென்றிருக்கின்றனர். தேர்தலில் 98 சதவீதம் வாக்குப் பதிவு என்று பொய்ச் செய்தியையும் அரசு பரப்பி வருகிறது. சில குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் மட்டும் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தது என்பதுதான் உண்மை

-Vijayasankar Ramachandran