facebook-round

img

இது மாடுகளின் காலம்...! -சு.பொ.அகத்தியலிங்கம்.

இது மாடுகளின் காலம்

மாடுகளை 
மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
மனிதன் எந்த விதத்தில்
மாடுகளைவிட உயர்ந்தவன் ?

மாடுகள் 
நமக்கு ஆக்ஸிசன் தரும்
மீத்தேன் தரும் 
புற்றுநோய் தீர்க்கும்
நெஞ்சுவலி நீக்கும் 
புத்திர பாக்கியம் தரும்
போக இன்பம் தரும் 

மாட்டுக்காக
மனிதனைக் கொல்வது
வேத புண்ணியம்
மனிதன் உணவுக்காக
மாட்டைக் கொல்வது
மகா பாவம் 
மனிதனைவிட
மாடே மேலானது !
ஆம்.
மனிதனைவிட 
மாடே மேலானது …


மாடுகள் இருக்குமிடத்தில்
மருத்துவமனை தேவையில்லை
நூலகம் தேவையில்லை
பள்ளிக்கூடம் தேவையில்லை
ஆராய்ச்சி தேவையிலை 
மாடுகளே போதும்
மாடுகளே எல்லாம்
மாடுகள் மட்டுமே எல்லாம் 

மந்திரிகள் 
இனி தேவை இல்லை
மாடுகளே போதும்
மந்திரிசபை 
தேவையே இல்லை
மாட்டுத் தொழுவமே போதும் !

மனிதனக் கொல்லு
மாடுகளை ஆளவிடு
இது மாடுகளின் காலம்
மறந்துவிடாதே !

சு.பொ.அகத்தியலிங்கம்.
.