பொருளாதரத்திற்கான நோபல் பரிசு வாங்கிய இந்தியரைப் பாராட்டலாமென்றால் அவரோ செல்லாப் பண நடவடிக்கையின் லாஜிக்கே புரியவில்லை என்று சொல்லி விட்டார். முதன் முதலாக திஹாருக்குச் சென்ற (மாணவராயிருக்கும் போது) பொருளாதார நிபுணர் என்கிற பெருமையும் அவருக்கு. இதற்கெல்லாம் மேலாக தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் ஜே.என்.யுவின் முன்னாள் மாணவர் வேறு.
சரி தலையைத் தண்ணீருக்கு மேல் தூக்கலாமென்று நினைத்தால், நிர்மலா சீத்தாராமனின் கணவரே அரசின் பொருளாதாரக் கொள்கையை விமரிசித்து ‘இடதுசாரிப்” பத்திரிக்கை என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் இந்துவின் நடுப்பக்கத்தில் எழுதி விட்டார்.
என்ன செய்வது.... தி. நகருக்கு வரும் கூட்டம் குறையவில்லை, மூன்று சினிமாக்களின் வசூல் அபாராம், ஃப்ளிப் கார்ட் விற்பனை அமோகம் என்று பொருளாதாரத்தை நினைத்து திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
நாளைக்காவது நல்ல ராசிபலன் வருகிறதா என்று பார்ப்போம்.