election2021

img

200 நாட்டு வெடிகுண்டுகள்..

மேற்குவங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அம்மாநிலத்தில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. மாற்றுக் கட்சி தொண்டர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.இந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் பங்கர் பகுதியில் காசிப்பூர் போலீசார் செவ்வாயன்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பங்கர் பகுதிக்கு உள்பட்ட வனப்பகுதியில் சுமார் 200 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இந்த நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது; காட்டுப்பகுதியில் மறைத்து வைத்தது யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 27-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

;