election2021

img

ஆத்தூரில் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்....

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தமது பிரச்சாரத்தைத் துவக்கினார். திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கே.முருகன், ஒன்றிய செயலாளர் சூசை மேரி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாமணி, கல்யாணி, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், எஸ்.ஆர்.முருகன், திராவிடர் கழக செயலாளர் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;