election2021

img

‘டிவெண்டி-20’ கட்சியில் சேர்ந்த உம்மன் சாண்டியின் மருமகன்... ‘அரசியலற்ற அரசியல்’ கட்சியில் ஐக்கியம்...

திருவனந்தபுரம்:
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மூத்த மகள் மரியா. இவருடைய கணவர் வர்கீஸ் ஜார்ஜ். இவர்கள் இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர்திருமணம் நடந்தது. 

வர்கீஸ் ஜார்ஜ், துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில், அவர் கேரளத்தில் ‘அரசியலற்ற அரசியல்’ என்ற என்ஜிஓ பாணியில் செயல் பட்டு வரும் ‘டிவெண்டி-20’ (Twenty20) எனும் கட்சியில் இணைந்துள்ளார்.உம்மன் சாண்டியின் செயல்பாடு பிடிக்காததால், தான் டிவெண்டி-20 கட்சியில் சேரவில்லை. மாறாக, டிவெண்டி-20கட்சியின் செயல்பாடுகள் எனக்குபிடித்திருந்தது. அதனால்தான், அந்தக் கட்சியில் இணைந்துள் ளேன் என்று தெரிவித்துள்ளார்.

டிவெண்டி-20 அமைப்பானது, 2015 உள்ளாட்சித் தேர்தலில் கொச்சி மாவட்டத்தில் உள்ளகிழக்கம்பலம் கிராம பஞ்சாயத்தில் உள்ள 19 வார்டுகளில் 17-ஐகைப்பற்றியது. 2020-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 18 வார்டுகளை கைப்பற்றியது. மேலும், ஐக்கரநாடு, குன்னத்துநாடு மற்றும் மழுவனூர் ஆகியமேலும் 3 கிராம பஞ்சாயத்துகளிலும் வெற்றி பெற்றதால், தற்போதுகேரள சட்டமன்றத் தேர்தலில் 8 இடங்களில் இந்தக் கட்சி போட்டியிடுகிறது.

;