election-2019

தேர்தல் ஆணையத்தின் நேர்மைக்கு சவால் விடுத்த சுயேட்சை வேட்பாளர்!

அரசுப் பதவியில் இருப்பதை குறிப்பிடத் தவறி விட்டார்,…குற்றவழக்கை மறைத்து விட்டார், கணவர் பெயரை சரியாக குறிப்பிட வில்லை… என்று சிறு சிறு காரணத்துக்காக எல்லாம் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களைதள்ளுபடி செய்து தாங்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு என்று காட்டிக் கொள்வது தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் வழக்கம்..!நெல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்மோகன்ராஜ், தேர்தல் ஆணையம் கண்டிப்பாக இருப்பதுபோல நடிப்பதாகவும், தங்கள் பணிகளை அவர்கள் சரிவரசெய்வது கிடையாது என்றும் நிரூபிக்க நினைத்துள்ளார்.அதற்காக, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த பிரமாணபத்தி ரத்தில், அவர் தனக்கு, கோபாலபுரம், போயஸ்கார்டன், சிறுதாவூர், கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு சொத்து இருப்பதாகவும், ரூ. 4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் போலியானசொத்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.


அதனை சரிபார்த்த தேர்தல் ஆணையமும் அவர் கூறியதுஉண்மை என்று ஆமோதித்து அவருக்கு ‘பச்சை மிளகாய்’சின்னம் ஒதுக்கியிருப்பது தான் வேடிக்கையின் உச்சம்.சாதாரண சுயேட்சை வேட்பாளரின் ஆவணங்களையே இவ்வளவு மெத்தனமாக சரிபார்க்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், முக்கிய கட்சிகளுக்கு எந்த அளவுக்கு சாதகமாகநடந்து கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ள மோகன்ராஜ், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை நாட்டு மக்களுக்கு தோலுரித்துக் காட்டவே தான் இப்படி ஒரு கணக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.தான் பல ஆண்டுகள் நேர்மையான காவல் ஆய்வாளராக பணிபுரிந்து விட்டு கடைசியாக பணம் சம்பாதிப்பதற்காக தியாகராய நகர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த 3 ஆண்டுகளில் லஞ்சம் பெற்று உயர் அதிகாரிகளுக்கு வழங்கியதால் எந்த நடவடிக்கையும் இன்றி தப்பியதாகவும் அவர் தெரிவித்திருப்பதோடு, முடிந்தால் தன் மீது தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று சவால் விட்டுள்ளார்.



;