election-2019

img

மோடி அரசால் கைவிடப்பட்ட கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி

கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள வரதராஜபுரத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் (இஎஸ்ஐ) மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு 1971 ஆம் ஆண்டு இஎஸ்ஐ மருத்துவமனை துவக்கப்பட்டது. அதே வளாகத்தில் 32 ஏக்கர் பரப்பளவில் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி அமைக்க தொழிலாளர் நலத்துறை முடிவு செய்தது. இஎஸ்ஐ சார்பில் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. கோவை இஎஸ்ஐ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் 2013ஆம் ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டன. கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்தது.மோடி அரசு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த தொடங்கியது. அந்த கொள்கைக்கு முரணான 13 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை கைவிடுவது என முடிவு செய்தது. மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கவும் உத்தரவிட்டது. இது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த சென்னை உள்ளிட்ட இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் படித்துவந்த மாணவர்களை கொந்தளிக்க வைத்தது. மாணவர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தியது. தொழிலாளர்கள் ஆதரவளித்தனர். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு 2016இல் தமிழக அரசே இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை எடுத்து நடத்துவதாக இஎஸ்ஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. மோடியே நேரில் வந்து கோவையில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாணவர் போராட்டம் மோடி அரசை அடி பணிய வைத்தது. மற்ற கல்லூரிகளும் தப்பி பிழைத்தன.

;