election-2019

img

பானை சின்னத்திற்கு வாக்குகேட்டு திருமாவளவன் தீவிர பிரச்சாரம்

சிதம்பரம், ஏப்.4-


சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், காட்டுமன்னார்கோவில், சிறீமுஷ்ணம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் சோழதரம், பாளைங்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.திருமாவளவன் செல்லும் கிராமங்கள் தோறும் மேலதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். வேட்பாளருடன் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

;