election-2019

img

4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனு பெறக்கூடாது - சத்யபிரதா சாஹூ

4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28 ஆம் தேதி வேட்பு மனு பெறக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.  

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:- 

ஏப்ரல் 27-ல் வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை, 28-ம் தேதி ஞாயிறு விடுமுறை காரணமாக இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும்

வேட்புமனுக்கள் 27 , 28 தேதிகளில் பெறக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மே 2 ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


;