election-2019

img

மீண்டும் தமிழகத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல்

 மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட 38 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளார்.  தற்போது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் அவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனை அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனுடன் பணம் பட்டுவாடாவை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.