election-2019

img

ஆர்எஸ்எஸ் பிரிவிலிருந்து முஸ்லிம்கள் விலகினர்

நாக்பூர், ஏப்.6-


ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய முஸ்லிம் ராஷ்ட் ரிய மஞ்ச்-சிலிருந்து 5 ஆயிரம் பேர் விலகியுள்ளனர்.முஸ்லிம் ராஷ்ட்ரியமஞ்ச்-சின் நாக்பூர் நகரத் தலைவர் ரியாஸ் கான் இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித் துள்ளார்.“முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்-சில் இருக்கும் எங் களை, பாஜக தொடர்ந்து அலட்சியம் செய்து வந்தது. எங்களின் கோரிக்கைகளை ஆர்எஸ்எஸ், பாஜக ஆகிய 2 அமைப்புக்களுமே உதாசீனம் செய்து விட்டன.எனவே, முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்-சிலிந்து 5 ஆயிரம் உறுப்பினர்களும், அலுவலக நிர்வாகிகள் 20 பேரும் வெளியேறி இருக்கிறோம். அத்துடன் நாங்கள் காங்கிரசிலும் இணைந்துள்ளோம்” என்று ரியாஸ்கான் கூறியுள்ளார்.

;