election-2019

நாஞ்சில் சம்பத் பிரச்சாரம்

திருப்போரூர், ஏப்.2- காஞ்சிபுரம் மக்களவை தொகுதி மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் செல்வம் மற்றும் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து, திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் நாஞ்சில் சம்பத் செவ்வாயன்று (ஏப்.2) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இந்தப் பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில் ‘தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவான ஆட்சி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் வகையில், முதல்வர் பழனிசாமி ஆட்சிசெய்து வருகிறார். இதேபோல், ஏழை எளிய மக்களுக்குஎதிரான ஆட்சியை செயல்படுத்தி வரும் நரேந்திரமோடியின் மத்திய அரசுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டதால்,பொதுமக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

;