election-2019

img

பெரம்பூர் தொகுதியை மேம்படுத்துவேன்

சென்னை.ஏப்.3-


ஆளும் அதிமுக அரசால் புறக்கணிக்கப்பட்ட பெரம்பூர் தொகுதியை முழுமையாக மேம்படுத்த பாடுபடுவேன் என்று திமுகவேட்பாளர் ஆர்.டி.சேகர் வாக்குறுதி அளித்து புதனன்று (ஏப்3) பகுதிச்செயலாளர் ஜெயராமன் தலைமையில் பிரச்சாரம் செய்தார். பெரம்பூர் பிபிரோடு அருகில் கரிமேட்டில் துவக்கிய பிரச்சாரம் அண்ணாநகர், வேலாயுதம், ஆசிரியர்,காமராஜர், கருணாநிதி, கட்டபொம்மன் தெருக்களில் வீடுவீடாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குஅளிக்குமாறு ஆதரவு கோரினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், சிபிஎம் பகுதிச் செயலாளர் விஜயகுமார், சேகர், உமா, பென்சிலைய்யா, நாராயணன்(தையல் சங்கம்),வெங்கடே சன்(கட்டுமானசங்கம்) , சுப்பிரமணி(சிபிஐ), கல்தூண்(விசிக), ந.பாஸ்கர் (மதிமுக), அமீது (தமுமுக), கவுசீ(இந்தியமுஸ்லீம்லீக்)உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;