election-2019

img

மேற்கு வங்கம் : சி.பி.எம் வேட்பாளர் ராமசந்திரா தாம் இன்று வேட்பு மனு தாக்கல்

மிகப்பெரிய பேரணி ஆதரவுடன் மேற்கு வங்காளத்தின் போலேபூர் நாடாளுமன்ற தொகுதி சி.பி.எம் வேட்பாளர் ராமசந்திரா தாம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


மேற்குவங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய பா.ஜ.கவிற்கு எதிராக அம்மாநிலம் முழுவதும் எதிர்ப்பு அலை நிலவி வருகிறது. அதேசமயத்தில் ஏற்கனவே ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றாக ஏற்கும் மனநிலையோடு மக்கள் ஆதரவளித்து வருகின்றனர். மேலும், வருகின்ற ஏப்ரல் மாதம் 11ம் தேதி தேர்தலை சந்திக்கவுள்ள அம்மாநிலத்தில் இன்று மாலையோடு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் முடிவடைந்துள்ளன.


தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அம்மாநிலத்தின் போலேபூர் நாடாளுமன்ற தொகுதி சி.பி.எம் வேட்பாளர் ராமசந்திரா தாம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக நடத்தப்பட்ட பேரணியில் மக்கள் பலர் செங்கொடிகளோடு அதிகளவில் திரண்டு அவருக்கு ஆதரவு திரட்டினர். மதச்சார்பற்ற மத்திய அரசை கொண்டுவர இடதுசாரிகளை தேர்ந்தெடுங்கள் என்ற வாசகங்கள் உடைய பதாகை அப்பேரணியின் அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.


;