election-2019

img

மேற்குவங்கம்: வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி-குண்டு வீச்சால் பற்றம்

மேற்குவங்கத்தில் வாக்குபதிவின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி வாக்காளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 117 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் முர்ஷிதாபாத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் வாக்குபதிவின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி வாக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மூர்ஷிதாபாத் வாக்குச்சாவடி அருகே அடையாளம் தெரியாத நபர் குண்டு வீசி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

;