education

img

ரெடியா இருங்க....  டி.என்.பி.எஸ்.சி “குரூப் 4” வருது 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) பலவிதமான தேர்வுகள் வைத்தாலும் குரூப் 4 தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் மத்தியில் தனிசெல்வாக்கு உள்ளது. வரும் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் (GROUP 4) போன்ற பணியிடங்களுக்கு தனி தனியாக தேர்வு நடத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டு இரண்டு தேர்வுகளும் “குரூப் 4” என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்ட நிலையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 

இந்நிலையில் நடப்பாண்டுக்கான “குரூப் 4” தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடத்தப்படும் (தமிழக அரசு அறிவிப்பின் படி) என்றும் தேர்வு அறிவிக்கை தொடர்பான விபரங்கள் வரும் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிப்பு மற்றும் காலிப்பணியிடங்கள் பற்றிய விபரம் வந்தவுடன்  டி.என்.பி.எஸ்.சி. இணையதளங்களில் (www.tnpsc.gov.in, www.tnpsc.exams.net) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14. 
 

;