புதுதில்லியிலுள்ள “AIIMS” மருத்துவமனையில் உள்ள 503 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Nursing Officer
காலியிடங்கள்: 503 (UR-282, SC-66, ST-32, OBC-123)
சம்பளவிகிதம்: ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், PWBD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஜெனரல் நர்சிங் பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதியை இந்திய. மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 15.9.2019.
இத்தேர்வுகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி: 24.9.2019.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500 (SC/ ST/ EWS/ PWD பிரிவினர்களுக்கு ரூ.1200). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.aiimsexams.org என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 21.8.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.