புதுதில்லியில் உள்ள “Employees Provident Fund Organisation”ல் உள்ள 2189 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Social Security Assistant
காலியிடங்கள்: 2189
சம்பளம்: ரூ.25,500
வயதுவரம்பு: 21.7.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD/ Ex.SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் ஒரு மணி நேரத்திற்குள் 500 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, Skill தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.ஆன்லைன் எழுத்துத் தேர்வானது Phase-I & Phase-II என இரு கட்டங்களாக நடைபெறும்.
Preliminary எழுத்துத் தேர்வு (Phase-I) நடைபெறும் நாட்கள்: 31.8.2019 & 1.9.2019.ஆன்லைன் எழுத்துத் தேர்விற்கான Call Letter-ஐ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (பெண்கள்/ SC/ ST/ PWD/ Ex.SM - ரூ.250). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.epfindia.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், Left Thumb Impression மற்றும் Hand Written Declaration-ஐ ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 21.7.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.