தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்துக்கான உச்ச வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021 செப்டம்பர் 9ல் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.