education

img

2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்... விண்ணப்பப் பதிவு ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (73 பாடப் பிரிவுகளில்) 2,340 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு நேரடிநியமனம் மூலம் உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்அண்மையில் வெளியிட்டது. முதுநிலைப் பட்டப் படிப்புடன், நெட், செட் தேர்வில் தேர்ச்சி அல்லது பி.எச்டி முடித்த 57 வயதுக்கு உள்பட்டவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் எனஅறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் விண்ணப்பம் aபதிவு தேதி ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாயன்று அறிவித்தது. கூடுதல் தகவல்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

;