ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயந்து மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கோட்டாவில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது தன்வீர் என்ற 20 வயது மாணவர் நீட் பயிற்சி பெற்று வந்த அவர் நேற்றிரவு மாற்றுத் துணி அணியப் போவதாக தன் சகோதரியிடம் கூறிவிட்டு ஒரு அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் கோட்டாவில் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது.