சென்னை,ஜூலை 24- பொறியியல் படிப்புக்கான 3-வது கட்ட கலந்தாய்வு முடிவில் 1 லட்சத்து 16 ஆயி ரத்து 834 இடங்கள் நிரம்பவில்லை. 4-வது இறுதிச் சுற்று முடிவில் 1 லட்சம் இடங்கள் காலியாகவே இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. தமிழ்நாட்டில் 479 பொறியியல் கல்லூரி கள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன. இந்த படிப்பில் சேர்வ தற்காக 1 லட்சத்து 35 ஆயிரத்து 116 மாண வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்க ளின் சான்று சரிபார்ப்பு முடிந்து 1 லட்சத்து 679 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றனர். முதல் கட்டமாக விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தொழில்கல்வி பிரிவினருக்கு ஜூன் 15 முதல் 28 ஆம் தேதி வரை சென்னையில் நேரடி கலந்தாய்வு நடந்தது. அதை தொடர்ந்து, ஆன்லைன் மூலம் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் 3 சுற்றுக்கள் நேற்று முன் தினம் முடி வடைந்தது. இதில் பொதுப்பிரிவின ருக்கான இடங்களில் 34 ஆயிரத்து 740 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 4-வது கட்ட கலந்தாய்வு கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 28 ஆம் தேதி முடிவடைகிறது.
3-வது கட்டகலந்தாய்வு முடிவில் 1 லட் சத்து 16 ஆயிரத்து 834 இடங்கள் நிரம்ப வில்லை. 4-வது இறுதிச்சுற்று முடிவில் சேர்ந்த மாணவர்கள் போக 1 லட்சம் இடங்கள் காலியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரி களில் 77 ஆயிரத்து 450 இடங்கள் நிரம்பின. இந்த வருடம் அதைவிட குறைவான மாண வர்களே சேர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 3-வது கட்ட கலந்தாய்வு முடிவின் படி 35 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர வில்லை. 3 கல்லூரிகளில் மட்டுமே 100 விழுக்காடு இடங்கள் நிரம்பின. 29 கல்லூரி களில் 85 விழுக்காடு இடங்கள் நிரம்பின. 215 சுயநிதி கல்லூரிகளில் 10 விழுக்காட்டிற் கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளது. 150 கல்லூரிகளில் 5 விழுக்காட்டிற்கும் குறை வான இடங்கள் நிரம்பியுள்ளது. அதில் 23 கல்லூரிகளில் ஒரு விழுக்காட்டிற்கும் குறை வாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.