education

img

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு

தில்லி 
இந்தியாவில் கொரோனா பரவல் எழுச்சி பெற்ற காலத்திலிருந்து பள்ளி, கல்லூரி பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்ற நிலையில், 10-ஆம் வகுப்புத் தேர்வு இன்னும் பாக்கி உள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு தேதி ஜூன் மாத இறுதியில் அறிவிக்கப்படும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ  பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன.  

;