சென்னை,மார்ச்.15- தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்களுக்குச் சிறப்புத் தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பாலிடெக்னிக் இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு ஏப்ரல், அக்டோபரில் நடக்கும் பருவத் தேர்வுகளின்போது தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் dte.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் எனவும் அறிவிப்பு.
தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்குச் செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.