economics

img

இந்தியாவின் கோதுமை உற்பத்திக்கு அரசு நிர்ணயித்த எம்எஸ்பி 

இந்தியாவின் கோதுமை உற்பத்தி ஜூன் மாதத்துடன் முடிவடையும் 2021-22 பயிர் பருவத்தில் சுமார் 106.41 மில்லியன் டன்களாக இருக்கும் என அதிகாரப்பூர்வமாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மூன்றாவது மேம்பட்ட மதிப்பீட்டின்படி, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 314.51 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு உற்பத்தியான 310.74 மில்லியன் டன்களை விட அதிகமாகும். நாடு முழுவதும் கோதுமையின் விலை, குவிண்டாலுக்கு கிட்டத்தட்ட ரூ.80லிருந்து 100 வரை குறைந்து. இந்த சீசனில் முதல் முறையாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.2015க்கும் கீழே குறைந்துள்ளது.

ஏற்றுமதி தடைக்கு முன், இந்திய வர்த்தகர்கள் இரண்டு மாதங்களுக்குள் சுமார் 4 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது. அதில் சுமார் 1.2 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த கோதுமையின் அளவு 56 சதவிகிதமாகும்.

விவசாயிகள் தங்களுடைய கோதுமையை தனியார் வணிகர்களிடம் விற்றதால் கொள்முதல் குறைந்துள்ளது. ஏனென்றால் இது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2015 என்ற அரசு நிர்ணயித்த எம்எஸ்பி யை விட அதிகமாக இருந்தது. 

தற்போது, இந்தியாவின் கோதுமை உற்பத்தி 2021-22 பயிர் பருவத்தில் 106.41 மில்லியன் டன்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு உற்பத்தியை விட 3.8 மில்லியன் டன்கள் குறைவாகவும், 111.32 மில்லியன் டன்கள் என்ற முந்தைய மதிப்பீட்டை விட 4.41 சதவிகிதம் குறைவாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.