புதுதில்லி, ஜூலை 1 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயானது தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வியாழக்கிழமையன்று அமெரிக்க டால ருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் 03 காசுகளாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று மேலும் வீழ்ச்சியடைந்து வரலாற்றில் இல்லாத அளவிற்கு 79 ரூபாய் 11 காசுகள் என்ற சரிவைக் கண்டுள்ளது. அந்நிய டாலர் முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவது மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வது போன்றவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பானது,
2022 ஜனவரி முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 6 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், கொரோனா பொதுமுடக்கம் போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரம் ஏற்கெனவே கடுமை யான பாதிப்பைச் சந்தித்து இருந்தது. அதி லிருந்து சற்று மீண்டு வந்தாலும், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பைக் காட்டிலும் இறக்குமதி மதிப்பானது பல லட்சம் கோடி ரூபாய் குறைவு என்பதால், இறக்குமதிக்கான டாலர் தேவை அதிகமாக உள்ளது. இது ரூபாய் மதிப்பு சரிவுக்கு பொதுவான காரணமாக உள்ளது. இதில், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் புதிய தாக்குதலாக அமைந்தது. இதனால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம், பணவீக்கம் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்தியா வுக்கு இன்னும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த சரிவுக்கு மற்றொரு முக்கியமான கார ணம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா வில் இருந்து தொடர்ந்து வெளியேறிக் கொண்டி ருப்பதாகும். 2022-ஆம் ஆண்டில் மட்டும் இது வரை 28.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். இது கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த பொரு ளாதார வீழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும். அந்த ஆண்டில் 11.8 பில்லியன் டாலர்கள் வெளியேறியிருந்த நிலையில் இந்த முறை, அதைக்காட்டிலும் அதிகம் வெளியேறியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியானது பொதுமக்க ளுக்கும் பெரும் சுமையாக மாறக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா இறக்குமதியையே சார்ந்திருப்பதால் கச்சா எண்ணெய், எரிவாயு, உலோகம் போன்ற வற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய கூடுதலாக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படும். இதனால், இவை சம்பந்தமான பொருள்களின் விலை கடுமையாக உயரக்கூடும். இந்த அளவிற்கு ரூபாய் வீழ்ச்சி யடைவது நாட்டின் பணவீக்கத்தையும் அதி கப்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் எரிபொருள் தேவை அதிகம் என்ற நிலையில் கச்சா எண்ணெய்யை 80 சதவிகிதத்திற்கு மேல் இறக்குமதிதான் செய்கின்றது. கடந்த மே மாதம் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை 110 டாலர்களாக இருந்த நிலையில், அது தற்போது 122 டாலர்களாக அதிகரித்துள்ளது. அதே சமயம் உக்ரைன் ரஷ்யா போரின் போது 100 டாலர்களைத் தாண்டிய கச்சா எண்ணெய்விலை இன்னும் குறையாமல் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அதனால், கச்சா எண்ணெய்க்கே அதிக டாலர்களை இந்தியா செலவிடும் நிலை யில் பொருள்களின் விலையும் உயரும் அத னால் பணவீக்கமும் அதிகரிக்கும் என்று பொரு ளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், “இந்தியாவின் இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பான இடத்தில் உள்ளது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமோ வர்த்தகச் சந்தையோ இல்லை” என ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமாளித்துள்ளார்.